Thursday, 16 October 2025

சிட்டுகள் தினம்

சின்னச்சின்னக் குருவிகளே!
சிறகடிக்கும் சிட்டுகளே!.
எண்ணங்கள் சிறகடித்து
எண்ணித் தினம் தேடுதே!..

வீடுகளில் கூடு கட்டி
விளையாடுஞ்சிட்டுகளே!
கிச்கிச்செனும் சின்னொலியும்
இரசிக்கத்தான் கேட்கலையே!

பாரதியை தேடித்தான்
பறந்தே யங்கும் சென்றீர்களோ !
யாரை நீங்கள்  ஊடியே
ஊரையுந் துறந்தீர்களோ !

சின்ன உங்கள் இதயங்கள்
மின்னலைகள் தாங்கலையோ!
எண்ண அலைகள் சேரலையோ!
என்னருமைச் சிட்டுகளே!

காலை மாலை கூடியே
காணத்தான் வருவீர்களோ !
உங்களுக்குத்  தானியமோ

உலர்ந்துதான் காய்கிறதே!

சிட்டு

சிறகடிக்கும் சிட்டுகள் எங்கே?
(சிட்டுகள் தினம்)

வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
கீச்செனும் ஒலியைக் கேட்டிடவே.
கையில் நானுன்னை தொட்டிடவே.
வானம் எங்கும் தேடுகிறேன்உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
(வானம்)
சிறு சின்னம் வரைந்து பாடிட மனதில்
பாடல்கள் எனக்கும் போதவில்லை.
தினம் கூரையில் ஒலிக்கும் குரலில் இனிக்கும்
இனிமை சுகமோ மறக்கவில்லை.
எந்தன் சிறகுகள் விரித்து தேடும் கதி
எது தோணவில்லை ஒண்ணும் கூடவில்லை.
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை..
(வானம்)
ஊருக்குள் மரங்கள் ஒழிந்ததுவோ!
கூரைகள் மறைந்தும் போனதுவோ!
கட்டிடம் பெருகி போக்கியதோ!
காந்தலை வீசி ஓட்டியதோ!
நீ கூடும் கூட்டம் பாடும் பாட்டும்
எனது நிம்மதி ஆனதது.   
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
சிந் திய தானியம் யாருக்கிதோ
சிதறி வீணே கிடக்குதிங்கே.
அந்தியும் மாலையும் தேடியும் உன்னை
சிந்தைக்குள் எண்ணி ஏங்குறேனே.
சின்னச் சிட்டே கண்ணில் பட்டே தினம்
என்னைச் சேர்ந்தால் இன்பமடி.  
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
கொ என் சிட்டுகள் எங்கே?
(சிட்டுகள் தினம்)

வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
கீச்செனும் ஒலியைக் கேட்டிடவே.
கையில் நானுன்னை தொட்டிடவே.
வானம் எங்கும் தேடுகிறேன்—உன்
கானம் எங்கே வாடுகிறேன்.
(வானம்)
சிறு சின்னம் வரைந்து பாடிட மனதில்
பாடல்கள் எனக்கும் போதவில்லை.
தினம் கூரையில் ஒலிக்கும் குரலில் இனிக்கும்
இனிமை சுகமோ மறக்கவில்லை.
எந்தன் சிறகுகள் விரித்து தேடும் கதி
எது தோணவில்லை ஒண்ணும் கூடவில்லை.
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை..
(வானம்)
ஊருக்குள் மரங்கள் ஒழிந்ததுவோ!
கூரைகள் மறைந்தும் போனதுவோ!
கட்டிடம் பெருகி போக்கியதோ!
காந்தலை வீசி ஓட்டியதோ!
நீ கூடும் கூட்டம் பாடும் பாட்டும்
எனது நிம்மதி ஆனதது.   
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
சிந் திய தானியம் யாருக்கிதோ
சிதறி வீணே கிடக்குதிங்கே.
அந்தியும் மாலையும் தேடியும் உன்னை
சிந்தைக்குள் எண்ணி ஏங்குறேனே.
சின்னச் சிட்டே கண்ணில் பட்டே தினம்
என்னைச் சேர்ந்தால் இன்பமடி.  
சின்ன நெஞ்சில் உன்போல் சேருதற்கோ
இங்கும் யாருமில்லை கண்டும் ஆகவில்லை
(வானம்)
கவிஞர்.கொ.பெ.பிச்சையா.





.பெ.பி.அய்யா.





குருவிக் கூடு

குருவிக்கூட்டுக்குள்ளே குண்டு!

குருவிகளே குருவிகளே!எங்கே போறீங்கஉங்க
கூட்டுக்குயார் குண்டு வச்சான் நீங்க சொல்லுங்க.

பாடிக்கூடி வாழ்ந்த குருவிச்சாதி நீங்கங்ககூரை
தேடிக்கூடு கட்டிவாழ்ந்த வீடு எங்கெங்க?
ஒற்றுமையா வாழ்ந்தசாதி ஒன்று நீங்கங்க.
பற்றவைத்த பாவி எவன் நாசமாவாங்க!

காதலுக்கு சாதியென்ன நீதியில் லீங்க!--அந்தக்
கடவுளுக்கே பொறுக்காத பாவஞ்செஞ் ஜாங்க
மனசுகூடும் காதலையும் பிரிச்சு வைக் காங்க
இனந்திரிஞ்சு எரிமலைக வெடிக்க வைக்காங்க.

மனசுக்குத்தான் குண்டுவச்சு மடிஞ்சு போனாங்கஉங்க
இனத்தக்கூட விட்டு வைக்க இரக்கமில் லீங்க.
மருந்துக்குனு புடிச்சுப் புடிச்சு இனமழிக்காங்க.
பறந்துநீங்க இனம்தழைய மறைஞ்சி வாழுங்க.

அறமறியா மனுஷனுக்கு அறிவு இல்லீங்ககுருவி
அவசியமும் அவனறிஞ்சு புரிஞ்சுக்கொள் வாங்க/
புழுவினங்கள் பெருகிப்பயிர் அழிக்கும்பா ருங்க
அழுதுமனுசன் அப்பத்தான அறிஞ்சுபாப் பாங்க.

உமக்காகக் கூரைவீடு கட்டிவைப் பாங்கதேடி
உமைக்கூட்டி வந்துமே வாழவைப் பாங்க.
இனம்பகைக்கும் மனிதகுலம் திருந்தி வாழுங்க.
இளையதல முறையேனும் பொருந்தி வாழுங்க.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா