Monday, 17 February 2014

சின்னச்சிட்டுகள்

சின்னச்சின்னச்சிட்டுகளே!
.
சின்னச்சின்னச்சிட்டுகளே!
சிறகடிக்கும் பறவைகளே.
எண்ணங்கள் சிறகடித்து
எண்ணித்தினம் தேடுதே..

வீடுகளில் கூடு கட்டி
விளையாடுஞ்சிட்டுகளே!
கிச்கிச்செனும் சின்னொலியும்
இரசிக்கத்தான் கேட்கலையே!

பாரதியை தேடித்தான்
பறந்தங்கும் சென்றீர்களோ!
யாரிடம்தான் கோபமோ!
ஊரையேனோ மறந்தீர்களோ!!

சின்ன சின்ன இதயங்கள்
மின்னலைகள் தாங்கலையோ!
சிங்களராய் உம்மினத்தை
சிதைக்கத்தான் வந்தனவோ!

காலை மாலை கூடியே
காணத்தான் வருவீர்களோ!
உங்களுக்குத் தானியமோ
உலர்ந்துதான் காய்கிறதே!

கொ.பெ.பி.அய்யா.




No comments:

Post a Comment